சீனாவில் புதிதாக 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


சீனாவில் புதிதாக 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 4 Aug 2021 7:36 PM GMT (Updated: 4 Aug 2021 7:36 PM GMT)

சீனாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.

பீஜிங், 

உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.

இந்த நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அதிகபட்சமாக கடந்த ஜனவரி 30 ஆம் தேதி 92 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்தது. அதன் பின்னர் தொற்று குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

மேலும் அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. அந்த வகையில் 27 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

Next Story