பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை கைது செய்ய தடை நீட்டிப்பு


பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை கைது செய்ய தடை நீட்டிப்பு
x

கோப்புப்படம்

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை கைது செய்ய தடை நீட்டிக்கப்பட்டது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் கோர்ட்டில் உள்ளன. இது தொடர்பான ஒரு வழக்கில் அவர் ஆஜராகாததால் இஸ்லாமாபாத் கோர்ட்டு அவரை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது. ஆனால் அவர் வழக்கில் ஆஜராகவில்லை.

இதனால் நேற்று முன்தினம் இம்ரான்கானை கைது செய்யும் முயற்சியில் போலீசார் தீவிரமாக களமிறங்கினர். அதன்படி நூற்றுக்கணக்கான போலீஸ்காரர்கள் அவரது வீட்டின் முன்பு குவிக்கப்பட்டனர். இதனையறிந்த அவரது ஆதரவாளர்கள் அங்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் அவரது ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. அதில் ஏராளமான போலீசார் காயம் அடைந்தனர்.

இந்த நிலையில் இம்ரான்கான் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து அவரை கைது செய்வதற்கான தடையை தற்காலிகமாக நீட்டித்து லாகூர் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.


Next Story