பெண்கள் டி 20 அரையிறுதி ; இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஆட்டம் மழையால் தாமதம்
![கோப்பு படம் கோப்பு படம்](https://img.dailythanthi.com/Articles/2020/Mar/202003050919173033_Toss-delayed-due-to-rain_SECVPF.gif)
இந்தியா - இங்கிலாந்து இடையேயான கிரிக்கெட் போட்டி மழையால் தாமதம் ஆகியுள்ளது.
சிட்னி,
10 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஏ பிரிவில் முதலிடம் பிடித்த இந்திய அணியும் பி பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த இங்கிலாந்து அணியும் மோதுகின்றன.
மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக போட்டி தாமதம் ஆகியுள்ளது. சிட்னியில் கனமழை பெய்து வருகிறது. ஒருவேளை போட்டி கைவிடும் பட்சத்தில், ஏ பிரிவில் முதலிடம் வகிக்கும் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
Related Tags :
Next Story