ரஷித் கான் ஏன் தக்கவைக்கப்படவில்லை? சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளக்கம்
ரஷித் கான் ஏன் தக்கவைக்கப்படவில்லை என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
சென்னை,
ஐ.பி.எல். 2022 ஆம் ஆண்டு சீசனை முன்னிட்டு மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறுகிறது. அதற்காக அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்து கொள்ள முடியும். இதில் அதிகபட்சம் 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்களை ஒவ்வொரு அணியும் தக்க வைத்து கொள்ள முடியும்.
இந்நிலையில் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் எந்தெந்த அணிகளில் யார் யார் தக்கவைப்பு என்பது குறித்த பட்டியல் நேற்று வெளியானது .
அதன்படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேன் வில்லியம்சன் ,அப்துல் சமத் ,உம்ரன் மாலிக் ஆகியோரை தக்கவைத்துள்ளது.
எதிர்பார்க்கப்பட்ட சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் தக்கவைக்கப்படவில்லை.
ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்ததால் ரஷித் கான் தக்கவைக்கப்படவில்லை.என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது .
இதுகுறித்து விளக்கமளித்துள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தலைமை செயல் அதிகாரி கே ஷம்மி கூறுகையில்;
இது கடினமான முடிவு, ஆனால் ஒரு வீரர் ஏலத்தில் இருக்க விரும்பினால், அவருடைய விருப்பத்தை நாங்கள் கண்டிப்பாக மதிக்கிறோம். ஏலத்தில் சரியான விலையில் அவரை எடுக்க முடியுமா என்று பார்ப்போம்" என்று தெரிவித்துள்ளார் ..
Related Tags :
Next Story