விஜய் ஹசாரே கோப்பை: கடைசி பந்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தமிழ்நாடு


விஜய் ஹசாரே கோப்பை: கடைசி பந்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தமிழ்நாடு
x
தினத்தந்தி 24 Dec 2021 3:13 PM GMT (Updated: 24 Dec 2021 3:13 PM GMT)

பரபரப்பான ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஜெய்ப்பூர்,

விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு - சவுராஷ்டிரா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன் படி களமிறங்கிய சவுராஷ்டிர அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அபாரமாக ஆடிய விக்கெட் கீப்பர் ஜாக்சன் 134 ரன்கள் குவித்தார். முடிவில் அந்த அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது. தமிழக அணி தரப்பில் விஜய்சங்கர் 4 விக்கெட் கைப்பற்றினார்.

அடுத்து 311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர் பாபா அபராஜித் அபாரமாக விளையாடி 122 ரன்கள் குவித்தார். இந்திரஜித் 50 ரன்கள், தினேஷ் கார்த்திக் 31 ரன்னும் எடுத்தனர். பின்வரிசையில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடி 70 ரன்கள் குவித்து அசத்தியதோடு அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றார். 

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் கடைசி பந்தில் தமிழக அணி இலக்கை அடைந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தமிழக அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.


Next Story