பாகிஸ்தான் -ஆஸ்திரேலியா டெஸ்ட்: மழையால் 3 மணி நேர இடைவேளிக்கு பின் தொடங்கியது


பாகிஸ்தான் -ஆஸ்திரேலியா டெஸ்ட்: மழையால் 3 மணி நேர இடைவேளிக்கு பின் தொடங்கியது
x
தினத்தந்தி 7 March 2022 8:30 AM GMT (Updated: 7 March 2022 8:30 AM GMT)

அதிகாலை பெய்த மழையின் காரணமாக நான்காம் நாள் ஆட்டம் 3 மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

ராவல்பிண்டி,

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 476 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. 

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 73 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்து இருந்த போது போதிய வெளிச்சமின்மை மற்றும் மழை காரணமாக ஆட்டம் முன்கூட்டியே முடித்து கொள்ளப்பட்டது. 

டேவிட் வார்னர் 68 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 97 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். லபுஸ்சேன் 69 ரன்னுடனும், ஸ்டீவன் சுமித் 24 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிற இருந்த நிலையில், அதிகாலையில் பெய்த மழையின் காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மைதானத்தின் பவுண்டரி பகுதிகளில் ஈரத்தன்மை அதிக இருந்ததால், மைதானத்தை உலரச்செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து 3 மணி நேர காலதாமதத்திற்கு பின்னர் ஆட்டம் தொடங்கியது. தற்போதுவரை ஆஸ்திரேலிய அணி 80 ஓவர்கள் முடிவில் 2 விக்கெடுகள் இழந்து 288 ரன்கள் குவித்துள்ளது.


Next Story