உத்தப்பா- மொயீன் ஜோடியை தொடர்ந்து லக்னோ அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த சிவம் துபே..!!


Image Courtesy : @ChennaiIPL
x
Image Courtesy : @ChennaiIPL
தினத்தந்தி 31 March 2022 3:31 PM GMT (Updated: 31 March 2022 3:31 PM GMT)

கடந்த போட்டியில் ஏமாற்றம் அளித்த சிவம் துபே இந்த போட்டியில் சிறப்பாக விளையாடினார்.

உத்தப்பா - மொயீன் ஜோடியை தொடர்ந்து லக்னோ அணி பந்துவீச்சை மிரட்டும் துபே - ராயுடு ஜோடி ..!!

மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் 7-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் -சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி வெளியேறினார். மறுமுனையில் ராபின் உத்தப்பா சென்னை அணிக்கு அதிரடி தொடக்கம் கொடுத்தார். பவர் பிளேவில் லக்னோ பந்து வீச்சாளர்களை திணறடித்த அவர் பவுண்டரிகளாக விளாசி அசத்தினார். 

சிறப்பாக விளையாடிய அவர் 25 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 27 பந்துகளில் 50 ரன்கள் அடித்து வெளியேறினார். அதன் பிறகு மொயின் அலியும் பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் பறக்கவிட்டார். அவர் 22 பந்துகளில் 35 ரன்கள் குவித்து அவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு துபே மற்றும் ராயுடு ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி மீண்டும் லக்னோ பந்துவீச்சாளர்களுக்கு சவால் அளித்தனர். இருவரும் அடுத்தடுத்து சிக்சர் மற்றும் பவுண்டரிகளாக அடித்து வருகின்றனர்.

கடந்த போட்டியில் ஏமாற்றம் அளித்த சிவம் துபே இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

தற்போது வரை சென்னை அணி 16 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்துதுள்ளது.

Next Story