ஐஎஸ்எல் கால்பந்து தொடர்; பஞ்சாப் - ஐதராபாத் ஆட்டம் டிரா...!
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் - ஐதராபாத் அணிகள் மோதின.
டெல்லி,
12 அணிகள் கலந்து கொண்டுள்ள 10வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் எப்.சி - ஐதராபாத் அணிகள் மோதின.
முதல் வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடியதால் ஆட்டம் பரபரப்பாக சென்றது. இறுதியில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. பஞ்சாப் தரப்பில் ஜுவான் மேராவும், ஐதராபாத் தரப்பில் ஜோனதான் மோயாவும் கோல் அடித்தனர்.
Related Tags :
Next Story