விவசாயிகள் மறுவாழ்வு சங்க ஆலோசனை கூட்டம்

பனங்குடியில் விவசாயிகள் மறுவாழ்வு சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது

Update: 2022-09-07 18:19 GMT

திட்டச்சேரி;

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடியில் சி.பி.சி.எல். கையகப்படுத்தும் நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் மறுவாழ்வு சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் மறுவாழ்வு சங்க தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். முட்டம் ஊராட்சி தலைவர் மனோகரன் முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் சக்திவேல் வரவேற்றார். தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன் உள்பட பலர் பேசினார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறுசி.பி.சி.எல். நிறுவனம் கையகப்படுத்தும் 610 ஏக்கர் நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு தொகையை வழங்க வேண்டும். சி.பி.சி.எல். நிறுவனத்தை கண்டித்து விவசாயிகளை பெருமளவில் ஒன்று திரட்டி பல்வேறு கட்ட ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் சங்க பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்