கனிமொழி எம்.பி.க்கு 2-வது முறை கொரோனா பாதிப்பு

துபாயில் இருந்து சென்னை திரும்பிய கனிமொழி எம்.பி. அவருக்கு உடல் சோர்வு, இருமல், காய்ச்சல் இருந்தது.

Update: 2022-06-21 17:09 GMT

சென்னை,

தி.மு.க. மகளிரணி செயலாளரான கனிமொழி எம்.பி., ரசாயனம், உரத்துறை நாடாளுமன்ற நிலைக்குழு தலைவராகவும் இருந்து வருகிறார். கடந்த வாரம் வடமாநிலங்களில் எம்.பி.க்களுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அவர், கடந்த 18-ந்தேதி விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக துபாய் சென்றார்.

துபாயில் இருந்து சென்னை திரும்பிய கனிமொழி எம்.பி. அவருக்கு உடல் சோர்வு, இருமல், காய்ச்சல் இருந்தது. உடனே அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

உடனடியாக, சென்னையில் உள்ள இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அவர், வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே, கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட கனிமொழி, தற்போது 2-வது முறையாக பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டிருப்பதால், பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்