கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் சூர்யா ஜோடியாக சாயிஷா

கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் நடிக்க சூர்யா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க சாயிஷா ஒப்பந்தமாகி இருக்கிறார்.

Update: 2018-06-23 23:30 GMT
நடிகர் சூர்யா தற்போது ‘என்.ஜி.கே.’ எனும் படத்தில் நடித்து வருகிறார். போராளி சேகுவாரா வாழ்க்கை வரலாற்றை கொண்டு உருவாகி வரும் இப்படத்தை செல்வராகவன் டைரக்டு செய்கிறார். படத்தில் சூர்யா ஜோடியாக சாய்பல்லவி, ரகுல் பிரீத்சிங் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படம் தீபாவளி விருந்தாக திரைக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது.

‘என்.ஜி.கே.’ படத்தை அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் நடிக்க சூர்யா ஒப்பந்தமாகி இருக்கிறார். படத்தில் கதாநாயகி மற்றும் இதர நடிகர்-நடிகைகள் தேர்வு நடந்து வந்தது.

இந்தநிலையில் சூர்யா ஜோடியாக நடிக்க சாயிஷா ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த தகவலை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளனர்.

கடந்த ஆண்டு வெளியான வனமகன் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக சாயிஷா நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது நடிப்பு சிறப்பாக இருந்ததாக பாராட்டுகள் கிடைத்தன. அதனைத்தொடர்ந்து தற்போது சூர்யா ஜோடியாக நடிக்க சாயிஷா ஒப்பந்தமாகி இருக்கிறார். 

மேலும் செய்திகள்