32 நாட்களில் முடிவடைந்த படம் ‘ஏகாந்தம்’

‘ஏகாந்தம்’ என்றால் பேரானந்த நிலை என்று பொருள். எங்கள் படத்தின் கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமான டைட்டில், இது என்று கூறுகிறார், ‘ஏகாந்தம்’ படத்தின் டைரக்டரும், தயாரிப்பாளருமான ஆர்செல் ஆறுமுகம்.

Update: 2018-09-04 05:09 GMT
‘ஏகாந்தம்’  படத்தை பற்றி டைரக்டரும், தயாரிப்பாளருமான ஆர்செல் ஆறுமுகம் மேலும் கூறுகிறார்:-

“நகரத்தையும், நாகரீகத்தையும் தேடி சொந்த கிராமத்தை விட்டு புலம் பெயரும் மனிதர்கள் உறவு, பண்பாடு, மனிதநேயம் போன்ற அடையாளங்களை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இந்த கருவை மையமாக வைத்து கிராமத்து பின்னணியிலும், நகரத்து பின்னணியிலும் கதை சொல்லியிருக்கிறேன்.

50-க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ள விவாந்த் கதாநாயகனாகவும், பரதநாட்டியம்-குச்சிப்பிடி கலைஞர் நீரஜா கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார்கள். கொடைக்கானல் அருகில் பண்ணைக்காடு கிராமத்தில் முகாமிட்டு, 32 நாட்களில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடித்து இருக்கிறோம்.

படத்தை அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில் தணிக்கை குழு, ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறது.”

மேலும் செய்திகள்