தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தலைவர் பதவியில் இருந்து கே.பாக்யராஜ் ராஜினாமா

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தலைவர் பதவியில் இருந்து கே.பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார்.

Update: 2018-11-02 07:17 GMT
சென்னை,

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தலைவர் பொறுப்பில் இருந்து கே. பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார். சமீபத்தில், சர்கார் படம் தொடர்பாக பிரச்சினை எழுந்த போது, வழக்கு தொடர்ந்த வருணுக்கு ஆதரவான நிலைப்பாட்டை பாக்யராஜ் எடுத்தார். இதைத்தொடர்ந்து சர்கார் படப்பிரச்சினை நீதிமன்றத்தில், சமரசம் ஆனது. 

சர்கார்  பட விவகாரம்  தொடர்பாக கே பாக்யராஜுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டதாக கூறப்பட்டது.  இந்த நிலையில், திரைப்பட எழுத்தாளர் சங்கத்தலைவர் பதவியில் இருந்து கே பாக்யராஜ் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தலைவராக கடந்த மார்ச் மாதம்தான் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 

மேலும் செய்திகள்