மீண்டும் சர்ச்சையில் துல்கர் சல்மான்

சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டி இருப்பதற்கு மீண்டும் எதிர்ப்பு கிளம்பியது.

Update: 2020-04-28 04:59 GMT
சென்னை,

துல்கர் சல்மான் தயாரித்து நடித்துள்ள ‘வரனே அவஷ்யமுண்டு’ என்ற மலையாள படத்தில் தனது புகைப்படத்தை பயன்படுத்தி உருவகேலி செய்து இருப்பதாக ஒருவர் புகார் கூறியதையடுத்து துல்கர் சல்மான் அவரிடம் மன்னிப்பு கேட்டார்.

இந்த நிலையில் படத்தில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டி இருப்பதற்கு மீண்டும் எதிர்ப்பு கிளம்பியது. படக் குழுவினரை சமூக வலைத்தளத்தில் பலரும் கடுமையாக கண்டித்தனர். இதையடுத்து துல்கர் சல்மான் டுவிட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

“வரனே அவஷ்யமுண்டு படத்தில் இடம்பெற்றுள்ள பிரபாகரன் நகைச்சுவை காட்சி தமிழ் மக்களை அவமதிப்பதுபோல் இருப்பதாக என்னிடம் சிலர் தெரிவித்தனர்.

அந்த காட்சியை வைத்ததில் உள்நோக்கம் இல்லை. அந்த பெயரை கேரளாவில் சகஜமாக பயன்படுத்துகின்றனர். யாரையும் குறிப்பிட்டு அந்த காட்சியை வைக்கவில்லை. படத்தை பார்க்காமலேயே பலர் வெறுப்பு காட்டுகிறார்கள்.

இந்த பிரச்சினையில் எங்கள் தந்தைகளையும், மூத்த நடிகர்களையும் இழுக்காதீர்கள். இதனால் காயப்பட்டு உள்ளதாக கருதும் தமிழ் மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் படங்களில் யாரையும் காயப்படுத்துவது இல்லை”.

இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்