ஓய்வே எடுத்துக்கொள்ளாத சமந்தா!

நடிகை சமந்தா ஓய்வே எடுக்காமல் பிஸியாகவே இருக்கிறார்.

Update: 2020-05-31 00:18 GMT

ஓய்வே எடுத்துக் கொள்ளாமல் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் நடித்து வருகிறார், சமந்தா. சென்னை பல்லாவரத்தை சொந்த ஊராக கொண்ட இவர், ஐதராபாத்தில் மிகப்பெரிய பங்களா கட்டியிருக்கிறார். தெலுங்கு படப்பிடிப்பில் கலந்து கொள்ளும்போது, அவர் தன் சொந்த பங்களாவில்தான் தங்குகிறாராம்.

சமந்தா சமூக வலைத்தளங்களிலும் ‘பிஸி’யாக இருப்பவர். இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதை சமந்தா உற்சாகமாக கொண்டாடினார். இந்த மகிழ்ச்சியில் அவர் 10 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கியிருக்கிறார்.

மேலும் செய்திகள்