நடிகை ஜோதிர்மயியின் தாயார் பி.சி. சரஸ்வதி காலமானார்

நகரம் படம் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமான ஜோதிர்மயியின் தாயார் பி.சி.சரஸ்வதி.

Update: 2024-03-29 11:10 GMT

திருவனந்தபுரம்,

நகரம் படம் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் ஜோதிர்மயி. இவரது தாயார் பி.சி.சரஸ்வதி. கடந்த சில தினங்களாக பி.சி.சரஸ்வதி உடல் நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தார். இந்நிலையில், பி.சி.சரஸ்வதி உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 75.

அவரது உடல் தற்போது பொது மக்கள் அஞ்சலிக்காக எர்ணாகுளத்தில் உள்ள திருநக்கரா பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. பின்னர் இன்று மாலை 5 மணியளவில் அவரது உடல் ரவிபுரத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

ஜோதிர்மயிக்கு கடந்த 2004-ம் ஆண்டு நிஷாந்த் குமார் என்பவருடன் திருமணம் ஆனது. ஆறு ஆண்டுகள் மட்டுமே நீடித்த இவர்களது இல்லற வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. கடந்த 2010-ம் ஆண்டு தன்னுடைய முதல் கணவர் நிஷாந்த் குமாரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார் ஜோதிர்மயி.

பின்னர் மலையாள இயக்குனர் அமல் நீரத் என்பவரை கடந்த 2015-ம் ஆண்டு மறுமணம் செய்துகொண்ட ஜோதிர்மயி, தற்போது மலையாள படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்