21 வருடங்களுக்குப் பிறகு தலைவருடன் எனது கனவு நனவானது - கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன்..!
இதில் ஏழு வயதிலிருந்தே ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் என்றும் , ஒரு நாள் ரஜினி சார் வீட்டுக்குப் போய்ச் சந்திப்பேன் என்று என் பெற்றோரிடம் சொல்லிக் கொண்டிருந்தாக சஞ்சு சாம்சன் குறிப்பிட்டுள்ளார்.;
சென்னை,
28 வயதான கேரளத்தில் பிறந்த சஞ்சு சாம்சன் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர். மேலும் ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஆவார்.
அதிரடியாகவும் பெரிய உழைப்பில்லாமல் சிக்ஸர்களை அடிப்பதிலும் அதிரடி பெற்றவர். சிறிய வயதிலிருந்தே நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் என்று பல்வேறு நேர்காணல்களில் தெரிவித்துள்ளார். தற்போது அவரது கனவு நனவாகியுள்ளது.
ஐபிஎல் 2023 மார்ச் மாதம் 31ஆம் தேதி தொடங்குகிறது. சாம்சன் இதற்கு தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார். நடிகர் ரஜினி நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் ரஜினியின் அழைப்பின் பேரில் சாம்சன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவரது வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார். சாம்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து கூறியதாவது:
7 வயதில் இருந்தே நான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகன். அப்போதிலிருந்தே எனது பெற்றோர்களிடன் கூறி வந்தேன் நிச்சயம் ஒருநாள் ரஜினியை அவரது வீட்டில் சென்று சந்திப்பேன் என. தலைவர் என்னை அவரது வீட்டிற்கு அழைத்ததன் மூலம் 21 ஆண்டுகள் கழித்து எனது கனவு நனவானது.