இந்தியில் படம் இயக்குகிறேன், ஆனால்.. பா.ரஞ்சித் கூறிய தகவல்

இயக்குனர் பா.ரஞ்சித் இந்தியில் திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளார்.

Update: 2024-03-12 18:38 GMT

சென்னை,

அட்டகத்தி', 'மெட்ராஸ்' திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'கபாலி', 'காலா' ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உயர்ந்தவர் இயக்குனர் பா. ரஞ்சித்.

இவர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் ரஞ்சித் இந்தியில் திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தின் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாக உள்ள இந்த திரைப்படத்திற்கு 'பிர்சா' என்று பெயரிடப்பட்டுள்ளது. பிர்சா முண்டா 19-ம் நூற்றாண்டில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஆங்கிலேயர்களிடமும் உள்நாட்டு நிலவுடமைதாரர்களிடமும் அடிமைப்பட்டிருந்த, பழங்குடி மக்களுக்காகப் போராடியவர்.

இந்த படத்தில் ரன்வீர் சிங் நடிக்க உள்ளதாகவும், அவரிடம் பா.ரஞ்சித் தனது கதையை கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், இதனை பா.ரஞ்சித் தற்போது மறுத்துள்ளார். இது தொடர்பாக கூறிய அவர், "நான் இந்தியில் ஒரு படம் இயக்குகிறேன். ஆனால் நடிகர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அது சரியான நேரத்தில் அறிவிக்கப்படும்." என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்