ஷங்கரின் கனவு படத்தில் ஹிருத்திக் ரோஷன் - ராம்சரண்

ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் ராம்சரண் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2022-07-10 08:48 GMT

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் ஷங்கர். இவர் இயக்கும் படங்களின் காட்சிகள் பிரமிப்பூட்டத்தக்க வகையில் இருக்கும்.

'இந்தியன்-2' படம் இயக்குவதாக ஷங்கர் அறிவித்து, படப்பிடிப்பு பணிகளும் நடந்தன. ஆனால் பல்வேறு சிக்கல்கள் காரணமாக அந்த படத்தின் படப்பிடிப்பு நிலுவையில் இருக்கிறது. இதற்கிடையில் தெலுங்கில் ராம் சரணுடன் ஒரு படம், இந்தியில் ரன்வீர் சிங்குடன் ஒரு படம் என ஷங்கர் 'பிஸி'யாக இருக்கிறார். இந்த படங்களை தொடர்ந்து 'இந்தியன்-2' படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீருக்கடியில் அறிவியல் கலந்த ஒரு படத்தை இயக்குவது என்பது ஷங்கரின் கனவு. இதற்கான முன்னோட்டமாக தான் 'எந்திரன்' படத்தை அவர் இயக்கினார். கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு தனது கனவு படத்தை இயக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.

அதன்படி ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் இந்தி சினிமா உலகின் முன்னணி நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் தெலுங்கு பட உலகின் முன்னணி கதாநாயகன் ராம்சரண் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தை அடுத்த ஆண்டு எடுத்து முடித்து விட ஷங்கர் திட்டமிட்டுள்ளார். இதற்கான முதற்கட்ட பணிகள் இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

நீருக்கடியில் எடுக்கப்படும் இந்த படம் சர்வதேச அளவில் இந்திய சினிமாவுக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்