சென்னை கடற்கரையில் பிரமாண்டமான அரங்கு
பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கும் ஒரு புதிய படத்துக்காக, சென்னை கடற்கரையில் பிரமாண்டமான ஒரு ஓட்டல் அரங்கு அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த படத்தில், இசக்கி பரத் கதாநாயகனாக நடிக்கிறார். இவர், ‘கோலி சோடா-2’ படத்திலும், ‘நாடோடிகள்-2’ படத்திலும் நடித்தவர். இவர்களுடன் சித்ரா லட்சுமணன், யோகி பாபு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், ராமகிருஷ்ணன். கே.கார்த்திகேயன் தயாரிக்கிறார்.