ஒரே ஒரு முறை வந்த காதல்!
நிவேதா பெத்துராஜ் துபாயில் வசித்தபோது, ஒரே ஒரு முறை அவருக்குள் காதல் வந்ததாம்.
நிவேதா பெத்துராஜ்-ம், காதலரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டார்களாம். ‘‘நல்லவேளை, ஒருமுறை கூட அவரிடம் நான் பேசவில்லை. அதனால், எங்கள் காதல் வளரவில்லை. ஒரு சில நிமிடங்களில் கலைந்து போய் விட்டது. காதலில் சிக்கியவர்களின் கதைகளை கேள்விப்படும்போதும், பத்திரிகை செய்திகளில் படிக்கும்போதும், உடம்பு சிலிர்க்கிறது. காதல் இவ்வளவு ஆபத்தானதா? என்று பயமுறுத்துகிறது’’ என்கிறார், நிவேதா பெத்துராஜ்!