மாமியார்-மருமகள் பிரச்சினைதான் கதை!

தேசிய விருது பெற்ற படத்தை இயக்கியவர் இனிப்பான டைரக்டர்.

Update: 2018-10-24 08:13 GMT
தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய இனிப்பான டைரக்டர் இப்போது டைரக்டு செய்யும் புதிய படத்தில், அரசியல் சார்ந்த நாயகனும், நான்கெழுத்து நாயகியும் ஜோடியாக நடிக்கிறார்கள். இது, மாமியார்-மருமகள் பிரச்சினையை கருவாக கொண்ட கதை. மாமியாராக ‘வடிவான’ அம்மா நடிகையும், மருமகளாக நான்கெழுத்து நடிகையும் நடிக்கிறார்கள்.

மருமகளாக நடிக்கும் நடிகை மும்பைவாசி என்பதால் அவருக்கு தமிழ் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுக்கிறாராம், டைரக்டர். அந்த வகையில், டைரக்டர் மீது மருமகளாக நடிக்கும் நாயகிக்கு தனி மரியாதை ஏற்பட்டு இருக்கிறதாம்!

மேலும் செய்திகள்