வரலட்சுமியின் துணிச்சல்!

‘சண்டக்கோழி-2’ படத்தில் மிகப்பெரிய வில்லியாக நடித்தவர் வரலட்சுமி சரத்குமார்.

Update: 2018-10-25 22:45 GMT
‘சண்டக்கோழி-2’ படத்தில் மிகப்பெரிய வில்லியாக நடித்த வரலட்சுமி சரத்குமார், ‘‘கதாநாயகியாகத்தான் நடிப்பேன்’’ என்று பிடிவாதம் செய்யாமல், நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள எல்லா கதாபாத்திரங்களிலும் நடிக்க முடிவு செய்து இருக்கிறார்.

‘தாரை தப்பட்டை’ படத்தில் கதைநாயகியாக நடித்த அவர், தொடர்ந்து கதாநாயகியாக-குணச்சித்ர நாயகியாக நடித்திருப்பதுடன், வில்லி வேடத்திலும் துணிச்சலாக நடித்து இருக்கிறார். தொடர்ந்து இந்த கொள்கையை கடைப்பிடிக்கப் போவதாக அவர் கூறுகிறார்!

மேலும் செய்திகள்