நீண்ட இடைவெளிக்குப்பின், எஸ்.ஜானகி
கிராமப்புற மக்களின் வாழ்வியலை அடிப்படையாக வைத்து, `பண்ணாடி' என்ற படம் தயாராகிறது.
நேர்மை, உண்மை, பாசம், காதல், பண்பு கலா சாரம், விவசாயம் இவை அனைத்தும் `பண்ணாடி' குடும்பத்தில் வாழ்ந்த முன்னோடிகளின் வாழ்வியல்தான் கதை. இப்போதைய சூழலில் அந்த குடும்பத்தில் வந்த நாயகன் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சினையையும் எவ்வாறு நம் கலாசாரத்துக்கு ஏற்ப எதிர்கொள்கிறார்? என்பது திரைக்கதை.
படத்தின் சிறப்பு அம்சமாக பின்னணி பாடகி எஸ்.ஜானகி மிக நீண்ட இடை வெளிக்குப்பின் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.