மேலும் ஒரு திகில் படத்தில் நயன்தாரா!

திகில் படங்கள் மீது நயன்தாராவுக்கு மோகம் ஏற்பட்டுள்ளது

Update: 2019-04-28 05:38 GMT
‘மாயா’ என்ற பேய் படத்தில் நடித்ததில் இருந்து பேய் மற்றும் திகில் படங்கள் மீது நயன்தாராவுக்கு மோகம் ஏற்பட்டுள்ளது. தமிழ் ரசிகர்கள் பேய் படங்களை விரும்பி பார்க்கிறார்கள் என்ற ரகசியத்தை புரிந்து கொண்டு, அவர்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாக பேய் படங்களில் நடிப்பதில், நயன்தாரா ஆர்வமாக இருக்கிறார்.

அவரிடம் டைரக்டர் மிலிந்த் ராவ் ஒரு திகில் கதையை சொல்லியிருக்கிறார். அந்த கதை நயன்தாராவுக்கு பிடித்து விட்டது.. அநேகமாக அந்த படத்தில் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டைரக்டர் மிலிந்த் ராவ், சித்தார்த்-ஆண்ட்ரியா நடித்த ‘அவள்’ படத்தை டைரக்டு செய்தவர்!
 

மேலும் செய்திகள்