அமலாபால் மீது பரிதாபப்பட்ட டைரக்டர்!
அமலாபால் நிர்வாணமாக நடித்த `ஆடை' படம் திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
`ஆடை' படம் படப்பிடிப்பில் இருந்தபோது, அமலாபாலின் நிர்வாண காட்சியை படமாக்கியது எப்படி? என்பதை டைரக்டர் ரத்னகுமார் விளக்கினார்.
``நிர்வாண காட்சியில் அமலாபால் ஆடையில்லாமல் உடல் முழுவதும் `டிஷ்யூ' பேப்பரை சுற்றிக்கொண்டு பதற்றத்தோடு ஓடிவர வேண்டும். டிஷ்யூ பேப்பர் கிடைக்காமல், கையில் கிடைத்த பேப்பர்களை எல்லாம் அவர் உடல் மீது சுற்றினோம்.
இந்த காட்சியில் நடித்தபோது அமலாபால் கூனிக்குறுகி, ஒருவிதமான பயத்துடன் ஓடி வந்தார். அவரை பார்க்க பரிதாபமாக இருந்தது'' என்கிறார், டைரக்டர் ரத்னகுமார்!