“கவர்ச்சி உடை அணிய வேண்டாம்!”

கவர்ச்சி உடை அணிய வேண்டாம் என்று கணவர் தனது மனைவி (நடிகை)க்கு கட்டளைகள் விதித்து இருக்கிறார்.

Update: 2019-09-24 10:52 GMT
‘பல்லாவரம் நடிகை’ திருமணத்துக்கு பின்பும் கணவரின் அனுமதியுடன் நடித்து வருகிறார். விஷயம் அதுபற்றி அல்ல. படத்துக்கு படம் அவர் கவர்ச்சி உடை அணிகிறார். பிரபல கதாநாயகர்களுடன் நெருக்கமாக நடித்து வருகிறார். இதுபற்றி அவருடைய கணவரிடம் சில ஆந்திர ஆசாமிகள் போட்டுக் கொடுத்து இருக்கிறார்கள்.

அதைத்தொடர்ந்து அந்த நட்சத்திர கணவர் தனது மனைவி (நடிகை)க்கு 2 கட்டளைகள் விதித்து இருக்கிறார். அதில் ஒன்று, “இனிமேல் கவர்ச்சியாக நடிக்க கூடாது. கவர்ச்சி உடையணிந்து வெளிநிகழ்ச்சிகளுக்கு வரக்கூடாது. இந்த இரண்டு நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட்டால், தொடர்ந்து நடிக்கலாம்” என்று கூறியிருக்கிறாராம்.

வேறு வழியில்லாமல், கணவரின் நிபந்தனைகளுக்கு ‘பல்லாவரம் நடிகை’ பணிந்து இருக்கிறார்!

மேலும் செய்திகள்