சூர்யாவின் அடுத்த 2 படங்களுக்கு இசையமைக்கப்போவது இவர்தான்

‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, அடுத்ததாக வெற்றிமாறன், பாலா ஆகியோர் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

Update: 2021-10-20 18:18 GMT
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது ‘ஜெய் பீம்’ திரைப்படம் உருவாகி உள்ளது. ஞானவேல் இயக்கியுள்ள இப்படம் வருகிற நவம்பர் 2-ந் தேதி நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளது. இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.

இதையடுத்து தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா. இதுதவிர பாலா இயக்க உள்ள புதிய படத்திலும் கெஸ்ட் ரோலில் நடிப்பதோடு, அப்படத்தை தயாரிக்கவும் உள்ளார்.

சூர்யாவின் நடிப்பில் உருவாக உள்ள இந்த இரண்டு படங்களுக்கும் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சூர்யா - ஜிவி பிரகாஷ் கூட்டணியில் வெளியான சூரரைப் போற்று படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது அவர்கள் இருவரும் அடுத்தடுத்து 2 படங்களில் இணைந்து பணியாற்ற உள்ளதால், ரசிகர்களிடையே அப்படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

மேலும் செய்திகள்