கதைநாயகனாக ‘காதல்’ சுகுமார்
நகைச்சுவை நடிகரான ‘காதல்’ சுகுமார், ‘தொடாதே’ என்ற படத்தில் கதைநாயகனாக நடிக்கிறார்.
ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. அலெக்ஸ் டைரக்டு செய்கிறார். எஸ்.ஜெயக்குமார் தயாரிப்பதுடன் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
‘காதல்’ சுகுமார் ஜோடியாக புதுமுகம் பிரீத்தி நடிக்கிறார்.
குடியைத் தொடாதே, பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவளைத் தொடாதே, போதைப் பொருட்களைத் தொடாதே என்ற கருத்தை மையமாக கொண்ட கதை இது.