ரூ.2 லட்சம் தருவதாக பாலியல் தொல்லை - தெலுங்கு நடிகை பிராச்சி தாக்கர் புகார்

பிரபல தெலுங்கு நடிகை பிராச்சி தாக்கர் தனக்கு நேர்ந்த கசப்பான பாலியல் தொல்லை அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

Update: 2023-08-07 05:16 GMT

சினிமா வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக ஏற்கனவே நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் 'மீ டூ ' புகாரில் சிக்கி உள்ளனர். தற்போது பிரபல தெலுங்கு நடிகை பிராச்சி தாக்கரும் தனக்கு நேர்ந்த கசப்பான பாலியல் தொல்லை அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், ''சிறுவயதில் இருந்தே எனக்கு சினிமாவை பிடிக்கும். படிக்கும் நாட்களிலேயே பட்டாஸ் என்ற படத்தில் நடித்தேன். ஒரு விளம்பர படத்தில் நடிக்க ஒருவர் என்னை அணுகினார். நானும் நடிக்க சம்மதித்தேன். அட்வான்ஸ் ஆக காசோலை கொடுத்தனர். அந்த நபர் எனது செல்போன் நம்பரை வாங்கி கொண்டு படப்பிடிப்பு எப்போது என்பதை பிறகு சொல்வதாக தெரிவித்தார். அதன்பிறகு அதற்கு இணங்க சம்மதம்தானே என்று கேட்டார். எனக்கு புரியவில்லை. எப்போது படப்பிடிப்பு என்று சொல்லுங்கள் வந்து நடிக்கிறேன் என்றேன்.

அதற்கு அவர் அது அல்ல. ஒத்துழைக்க தயார்தானே? எனக்கு ஒரு பார்ட்னர் இருக்கிறான். உனக்கு ரூ.2 லட்சம் தருகிறேன். அவரோடு இருக்க நீ சம்மதிப்பாயா என்றார். அதன்பிறகு அவர் சொன்ன அர்த்தம் புரிந்து அதிர்ச்சியானேன். அந்த விளம்பர படத்திலும் நடிக்க மறுத்து விட்டேன்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்