ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டி: சென்னை அணிக்கு 150 ரன்கள் இலக்கு

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணிக்கு 150 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #IPL2019 #CSKvMI

Update: 2019-05-12 15:57 GMT
ஐதராபாத், 

ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில், டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி நடைப்பெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை எடுத்துள்ளது.

மும்பை அணியில் அதிகபட்சமாக பொல்லார்ட் ஆட்டமிழக்காமல் 41 (25) ரன்கள், குவின்டன் டி காக் 29 (17) ரன்கள், இஷான் கிஷன் 23 (26) ரன்கள் எடுத்தனர்.

சென்னை அணியில் சிறப்பாக பந்து வீசிய தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் மற்றும் இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து சென்னை அணி 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.

மேலும் செய்திகள்