கூடுவாஞ்சேரியில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்; முதியவர் பலி

கூடுவாஞ்சேரியில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் முதியவர் பலியானார்.

Update: 2019-04-12 22:00 GMT
வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி கண்ணகி தெரு, திருமலை நகர் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 65). இவர் நேற்று முன்தினம் இரவு கூடுவாஞ்சேரியில் இருந்து மாடம்பாக்கம் செல்லும் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

மேம்பாலத்தில் இருந்து வலது புறமாக திரும்பும் போது அதே திசையில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் கண்ணிமைக்கும் நேரத்தில் அருணாச்சலத்தின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த அருணாச்சலத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருணாச்சலம் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்