குவைத்தில் இருந்து 114 பயணிகள் சிறப்பு விமானத்தில் திருச்சி வந்தனர்

குவைத்தில் இருந்து 114 பயணிகள் சிறப்பு விமானத்தில் திருச்சி வந்தனர்.

Update: 2020-06-13 23:00 GMT
செம்பட்டு,

குவைத்தில் இருந்து திருச்சிக்கு நேற்று காலை சிறப்பு விமானம் மூலம் 114 பயணிகள் அழைத்து வரப்பட்டனர். பணி நிமித்தமாக குவைத் நாட்டிற்கு சென்ற அவர்கள், கொரோனா பாதிப்பால் இந்தியாவிற்கு வர முடியாமல் தவித்து வந்த நிலையில், மத்திய அரசுக்கு விடுத்த கோரிக்கையை ஏற்று சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்கள் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சிறப்பு மீட்பு விமானம் நேற்று காலை 9.40 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானத்தில் 80 ஆண் பயணிகள், 34 பெண் பயணிகள் உள்பட 114 பயணிகள் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் விமான நிலைய வளாகத்தில் முதற்கட்ட மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, சேதுராப்பட்டியில் உள்ள அரசு கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு மருத்துவ குழுவினர் மூலம் அவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டால், அவர்களுடைய சொந்த மாவட்டங்களுக்கு தனி வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இதற்கிடையே அந்த விமானம் மீண்டும் பகல் 11 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து குவைத் நோக்கி புறப்பட்டு சென்றது.

மேலும் செய்திகள்