மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு; வாலிபர் கைது

திருப்பூரில் மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-07-12 23:00 GMT
திருப்பூர்,

திருப்பூர் காலேஜ்ரோடு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 10-ந் தேதி சிறுமியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் சிறுமி மாயமானதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் மாணவியை அதே பகுதியை சேர்ந்த அபிஷேக் (வயது 19) என்பவர் ஆசை வார்த்தை கூறி, மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு கடத்தி சென்றுள்ளார்.

மேலும், அவர் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மதுரைக்கு சென்ற போலீசார் இருவரையும் மீட்டு திருப்பூருக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து சிறுமி மாயமான வழக்கை, போக்சோ வழக்காக திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசாருக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து அபிஷேக்கை மகளிர் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்