ஈரோடு மாவட்டத்தில் இன்று 36 ஆயிரத்து 350 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) 36 ஆயிரத்து 350 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.;
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட 10 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 27 முகாம்களில் தடுப்பூசி போடப்படுகிறது. இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள 60 ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 291 இடங்களில் 36 ஆயிரத்து 350 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.