தேவி பத்திரகாளி அம்மன் கோவிலில் சப்பர பவனி

தேவி பத்திரகாளி அம்மன் கோவிலில் சப்பர பவனி நடந்தது.

Update: 2021-10-02 14:29 GMT
உடன்குடி:

உடன்குடி கொட்டங்காடு தேவி பத்திரகாளி அம்மன் கோவிலில் புரட்டாசி மாத திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்மன் உள்பிரகார சப்பர பவனி, ஊஞ்சல் சேவை, அம்மன் சிவப்பு, வெள்ளை, பச்சை சாத்தி சப்பர பவனி, 208 திருவிளக்கு பூஜை உள்ளிட்டவை நடந்தது. 

2-ம் திருவிழாவான நிறைவு நாள் நிகழ்ச்சியாக அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி தெருவில் பவனி வந்தார். ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர்மக்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்