சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-10-02 20:37 GMT
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் செல்வகணபதி(வயது 20). கூலித் தொழிலாளியான இவர், செல்போனில் வீடியோ கால் மூலம் 13 வயது சிறுமியிடம் பேசி காதலித்து வந்ததாகவும், ஆபாச படங்களை பதிவேற்றம் செய்து, ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இது பற்றி சிறுமியின் பெற்றோர் கேட்டபோது தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து செல்வகணபதியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் அதற்கு உறுதுணையாக இருந்த ராஜா பொன்முடி, அவரது மனைவி கல்யாணி, மகன் கவியரசன் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்