அரசு பதவி உயர்வில் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டியதில்லை - சுப்ரீம் கோர்ட்

அரசு பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டியதில்லை என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

Update: 2018-09-26 05:32 GMT
புதுடெல்லி,

அரசு பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டிய கட்டாயமில்லை என்று கடந்த 2006-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்  தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினர் பின் தங்கிய நிலையில் இருப்பதற்கான தரவுகளை வழங்க வேண்டும் என்றும், அரசு பணியில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி, மறுபரிசீலனை செய்யக் கோரி, மத்திய அரசு மற்றும் பல்வேறு தரப்பினர் மனுத் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த சுப்ரீம்  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, தீர்ப்பை கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி ஒத்திவைத்தது. இதையடுத்து, இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அரசு பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு முறையை பின்பற்றவேண்டியதில்லை. இந்த உத்தரவை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற வேண்டிய  அவசியமில்லை என சுப்ரீம் கோர்ட் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்