ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன இயக்குனர் பதவியில் இருந்து அனில் அம்பானி விலகல்

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன இயக்குனர் பதவியில் இருந்து அனில் அம்பானி உள்ளிட்ட 5 பேர் விலகி உள்ளனர்.

Update: 2019-11-16 12:20 GMT
புதுடெல்லி,

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தின் தலைவராக அனில் அம்பானி இருந்து வருகிறார்.  அந்நிறுவனத்தின் இயக்குனர்களாக அனில் அம்பானி மற்றும் சாயா விரானி, ரைனா கரானி, மஞ்சரி காக்கர் மற்றும் சுரேஷ் ரங்காசார் ஆகியோர் இருந்து வருகின்றனர்.

இந்த நிறுவனத்தில், நடப்பு நிதியாண்டிற்கான முதல் காலாண்டில் ரூ.366 கோடி இழப்பு ஏற்பட்டு இருந்தது.  இந்நிலையில், நடப்பு நிதியாண்டிற்கான 2வது காலாண்டில் ரூ.30 ஆயிரத்து 158 கோடியாக இழப்பு உயர்ந்து உள்ளது.  இதுபற்றிய அறிக்கை வெளியான நிலையில், இயக்குனர் பதவியில் இருந்து விலகும் முடிவை அனில் அம்பானி உள்ளிட்ட 5 பேரும் எடுத்து உள்ளனர்.

கடந்த அக்டோபர் 4ந்தேதி, இந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மற்றும் இயக்குனர் பொறுப்பில் இருந்து வி. மணிகண்டன் விலகினார்.  இதனை அடுத்து செயல் இயக்குனர் மற்றும் தலைமை நிதி அதிகாரியாக டி. விஸ்வநாத் நியமிக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்