கேரளாவில் சாலை விபத்தில் 3 பேர் பலி

கேரளாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் பலியாகினர்.

Update: 2019-11-17 19:45 GMT
மலப்புரம்,

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் பகுதியைச் சேர்ந்த 4 பேர், ஒரு காரில் பொன்னானி என்ற இடத்தின் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரியும், காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காரில் இருந்த அகமது பாசில், சுபைதா மற்றும் நோபால் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த நவுசித் என்பவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்