நிர்பயா விவகாரத்தில் அரசியல் வேண்டாம்; அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்

நிர்பயா விவகாரத்தில் அரசியல் வேண்டாம் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2020-01-17 14:22 GMT
புதுடெல்லி,

நிர்பயா குற்றாவாளிகளுக்கு தூக்குத்தண்டனையை ஆம் ஆத்மியால் நிறைவேற்ற முடியவில்லை என்ற மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கருத்திற்கு  பதில் அளித்த டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்,

பிரகாஷ் ஜவடேகர் ஜி ஏதோ கூறுகிறார், ஸ்மிருதி இரானி ஜியும் வேறு ஏதோ கூறுகிறார். ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவதால் எந்த நன்மையும் ஏற்படாது. குற்றம் நடந்த 6 மாதங்களுக்குள் கற்பழிப்பாளர்கள் தூக்கிலிடப்படும் ஒரு திட்டத்தை நாம் உருவாக்க வேண்டும். 

நிர்பயா விவகாரத்தில் அரசியல் வேண்டாம். குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். குற்றவாளிகள் விரைவில் தூக்கிலிடப்படுவதை உறுதி செய்ய மத்திய மற்றும் மாநில அரசு இரண்டும் முயற்சி செய்ய வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பான மாநகரை உருவாக்க இணைந்து செயலாற்றுவோம். 

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்