டெல்லி மக்களுக்கே டெல்லி ஆஸ்பத்திரிகள்: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்புக்கு மாயாவதி எதிர்ப்பு

டெல்லி மக்களுக்கே டெல்லி ஆஸ்பத்திரிகள் என்று கூறிய அரவிந்த் கெஜ்ரிவாலின் அறிவிப்புக்கு மாயாவதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-08 20:45 GMT
லக்னோ,

கொரோனா காலகட்டத்தில், டெல்லி அரசின் ஆஸ்பத்திரிகளிலும், தனியார் ஆஸ்பத்திரிகளிலும் டெல்லி மக்களுக்கே சிகிச்சை அளிக்கப்படும் என்று முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார். இதற்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

நாட்டின் தலைநகரான டெல்லிக்கு பல மாநில மக்களும் பணிக்காக வருகின்றனர். அங்கு யாருக்காவது உடல்நிலை மோசமாகி, அவர் வெளிமாநிலத்தவர் என்பதற்காக டெல்லியில் சிகிச்சை மறுக்கப்பட்டால், அது துரதிருஷ்டவசமானது. இவ்விஷயத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்