இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 86,508 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 86,508 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

Update: 2020-09-24 04:33 GMT
புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளன.  இதுபற்றி மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 86,508 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 57 லட்சத்து 32 ஆயிரத்து 519 ஆக உயர்வடைந்து உள்ளது.

இதேபோன்று இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,129 பேர் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளனர்.  இதனால் நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 91 ஆயிரத்து 149 ஆக அதிகரித்து உள்ளது.

இதுவரை சிகிச்சை முடிந்து குணமடைந்து சென்றவர்களின் எண்ணிக்கை 46 லட்சத்து 74 ஆயிரத்து 988 ஆக உள்ளது.  மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 66 ஆயிரத்து 382 ஆக உள்ளது என தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்