கேரளாவில் இன்று 5,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரள மாநிலத்தில் இன்று 5,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-11-22 13:57 GMT
திருவனந்தபுரம்,

கேரள மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று 5,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,64,695 ஆக அதிகரித்துள்ளது.

கேரள மாநிலத்தில் இதுவரை 2,049 பேர் கொரொனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் இதுவரை 4,94,664 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது மருத்துவமனைகளில் 65,856 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்