ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்
ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவானது. பிற்பகல் 3.47-மணிக்கு பதிவான நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.
கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் வட மாநிலங்களில் அவ்வப்போது மிதமான நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றன.