18 ஆண்டுகளுக்கு பின் கிரீஸ் நாட்டுக்கு மத்திய வெளிவிவகார மந்திரி சுற்றுப்பயணம்
18 ஆண்டுகளுக்கு பின் கிரீஸ் நாட்டுக்கு மத்திய வெளிவிவகார மந்திரி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
புதுடெல்லி,
மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பு அதிகாரி அரிந்தம் பக்சி செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று கூறும்பொழுது, கிரீஸ் நாட்டுக்கு மத்திய வெளிவிவகார மந்திரி ஜெயசங்கர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக அவர் நாளை கிரீஸ் நாட்டுக்கு புறப்பட்டு செல்கிறார். கடந்த 2003ம் ஆண்டில் இருந்து 18 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக மத்திய வெளிவிவகார மந்திரியின் முதல் கிரீஸ் பயணம் இது என அவர் தெரிவித்து உள்ளார்.