மேகாலயாவில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 3.2 ஆக பதிவு
மேகாலயாவில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
மேகாலயா,
மேகாலயா மாநிலம் நொங்போ பகுதிக்கு வடகிழக்கே 33 கிமீ தொலைவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் 5 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.