75-வது சுதந்திர தினம்: நாட்டு மக்களுக்கு நாளை உரையாற்றுகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை உரையாற்ற உள்ளார்.

Update: 2021-08-13 16:21 GMT
புதுடெல்லி,

நாடு முழுவதும் வரும் 15-ம் தேதி 75ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை இரவு 7 மணிக்கு அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

முதலில் இந்தியிலும், அதைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் அவர் உரையாற்றுகிறார். பின்னர் அந்தந்த மாநில மொழிகளில் ஜனாதிபதி உரை மொழி மாற்றம் செய்யப்பட்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதேபோல் இரவு 9.30 மணிக்கு அகில இந்திய வானொலியிலும் ஜனாதிபதியின் உரை பிராந்திய மொழிகளில் ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது.

மேலும் செய்திகள்