தெலுங்கானாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு
தெலுங்கானாவின் கரிம்நகர் பகுதியில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஐதராபாத்,
தெலுங்கானாவின் கரிம்நகர் பகுதியில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. கரிம்நகரில் இருந்து 45 கி.மீட்டர் தொலைவை மையாமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவானது. பிற்பகல் 2.03 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை.