கேரளாவில் மேலும் 4,350- பேருக்கு கொரோனா
கேரளாவில் 4,350- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19- பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38,838- ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து 5,691 - பேர் இன்று குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்து 46 ஆயிரத்து 219- ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 47,001- ஆக உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.